Screen-Shot-2017-01-06-at-12.48.57-796x411
மனிதனைக் கொல்லும் ரோபோ: பயமுறுத்தும் கூகுள் முன்னாள் அதிகாரி

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி எரிக் ஷ்மிட் இன்னும் ரோபாக்கள் மனிதர்களைக் கொல்லுமா என்ற கேள்விக்கு பயமுறுத்தும் பதிலை அளித்துள்ளார்.

ஜெர்னியின் முனிச் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி எரிக் ஷ்மிட் பங்கேற்றார். அப்போது பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு எரிக் பதிலளித்தார்.

அப்போது, வருங்காலத்தில் ரோபோக்கள் மனிதர்களைக் கொல்லுமா? என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த எரிக், “சினிமாவில் ரோபோக்கள் கொல்வது போல வரும் காட்சிகளைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்வியை எல்லோரும் கேட்கிறார்கள்.” என்றார்.

தொடர்ந்து, “இதைப் பற்றி இன்னும் 10 முதல் 20 வருடங்களுக்கு கவலைப்பட வேண்டாம் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.” என்றார். ஆனால், “இப்போதைக்கு இதைப் பற்றி கவலையில்லை. இந்த கவலை கொஞ்ச காலத்திற்குப் பின் பட்டுக்கொள்ளலாம்,” என்றும் கூறியுள்ளார்.