sarahah
லட்சக்கணக்கில் குவிந்த புகார்களால் சரஹா நீக்கம்

சுய அடையாளத்தை மறைத்துக்கொண்டு ரகசியமாக மெசேஜ் அனுப்பும் வசதியை அளிக்கும் சரஹா அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

நம் பெயர் தெரியாதபடி யாருக்கு வேண்டுமானாலும் மெசேஜ் செய்ய முடியும் வசதியை அளிக்கும் அப்ளிகேஷன் சரஹா. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகமான இந்த அப்ளிகேஷன் கூகுள் ப்ளே ஸ்டோரில் லட்சக்கணக்கானவர்களால் டவுன்லோட் செய்யப்பட்டது.

இந்த ரகசிய மெசேஜ் வசதியை பயன்படுத்துபவர்களின் மொபைல் மூலம் பல தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது என்று புகார்கள் வந்தன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேத்ரினா காலின்ஸ் என்ற பெண் பாலியல் தொந்தரவு கொடுக்கும் விதமாக மெசேஜ்கள் குவிகின்றன என்று கூறி சரஹாவை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்க வேண்டும் என்று இணையத்தில் மனு (Petition) ஒன்றை உருவாக்கினார்.

அவர் உருவாக்கிய மனுவில் 4.7 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். இதன் எதிரொலியாக கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து சரஹாவை நீக்கிவிட்டது.